Sunday, February 20, 2011

பேராளர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:


மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு 2011

Ruj.Kami: JTS/SMPM-S/11(05)
30 ஜனவரி 2011

பேராளர்கள் அனைவருக்கும்,

வணக்கம்.
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு 2011 மாநாட்டில் பேராளாராகப் பதிந்து கொண்டுள்ள தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநாட்டைப் பற்றிய விவரங்கள்:
அ.    நாள்:    26.2.2011 முதல் 27.2.2011 வரை ( சனி  ‍- ஞாயிறு )
    இடம்:  லோட்டஸ், டெசாரு கடற்கரை தங்கும் விடுதி
    ( Lotus Desaru Beach Resort, Desaru, Johor )
    இணையòதளம்: http://tamil-ilakkiyakuudal.blogspot.com
    மின்னஞ்சல் முகவரி : : ms_tamilliterary@hotmail.com

ஆ.    பேராளர் பதிவு  &  மதிய உணவு    
          நாள்:    26.2.2011 சனிக்கிழமை
          நேரம்: 11.00 - 12.30 நண்பகல்
           இடம்: பிரதான மண்டபம், லோட்டஸ், டெசாரு கடற்கரை தங்கும் விடுதி

26.2.2011 சனிக்கிழமை, பிற்பகல்: 2.30க்கு மாநாட்டுத் திறப்புவிழா நடைபெறுவதால் கடைசி நேர பதிவைத் தவிர்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

இ.    பேராளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள்:
-இருவர், நால்வர், அறுவர்  தங்கும் வசதிகொண்ட அறைகள்
-காலை உணவு, காலைத்  தேநீர், மதிய உணவு, மாலைத்  தேநீர், இரவு உணவு
-விழா மலர்,அடையாள அட்டை, மாநாட்டுப் பை, ஆவணங்கள்

ஈ.    பதிவுக்கட்டணம்
பதிவுக்கட்டணம் முன் கூட்டியே செலுத்தப்பட்டிருக்கவேண்டும். பதிவின்போது பதிவுக்கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பதிவின்போது கட்டணம் கட்டப்பட்டதற்கான இரசீதை அவசியம் காட்டவேண்டும்.

உ.    சிறப்பு விருந்து
பேராளர்களுக்கான இன்னிசையுடன் கூடிய சிறப்பு விருந்து 26.02.2011-ஆம் நாள் இரவு 7.30 மணிக்கு விடுதி மண்டபத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இவ்விருந்தில் கலந்துகொள்ள எல்லாப் பேராளர்களும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.


ஊ.    நிறைவு விழா

27.02.2011-ஆம் நாள் பிற்பகல் 4.00 மணிக்கு விடுதி மண்டபத்தில் மாநாட்டின் நிறைவு விழா நடைபெறும். விடுதி நிர்வாகத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி நண்பகல் 12.00-க்கு அனைத்துப் பேராளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் விடுதி அறைகளைக் காலி செய்துவிடவேண்டும்.
   
மேல் விவரங்களுக்கு மாநாட்டுî செயலகத்துடன் தொடர்பு கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
மாநாட்டில் பங்குகொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    அன்புடன்,

 ( தமிழ்மணி )
    செயலாளர்,
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய மாநாடு 2011

பி.கு: தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

திரு.ந.வேணுகோபால்: 016-7333720
திரு.இரா.தமிழ்மணி :012-7814019
திரு. சு.இரவிச்சந்திரன்: 013-7689379

பேராளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!

Tuesday, February 1, 2011

வெளியூர் பேராளர்களுக்கு....


அனைவருக்கும் கனிந்த வணக்கம்,

மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய உறவுப்பாலம்: மாநாடு 2011, மிகச் சிறப்பான ஏற்பாடுகளோடு தயாராகி வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்றோம். இது வரை 75 சதவீத முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.

அன்பார்ந்த பேராளர்களே,

வெளியூர் பேராளர்களுக்கு முக்கிய அறிவிப்பு யாதெனில், உங்களுடைய வருகையை தொலைபேசி வாயிலாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ எதிர்வரும் 15.02.2011க்குள் மறுவுறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தங்கள் போக்குவரத்து வசதிக்காக ஜோகூர் பாரு லார்க்கின் பேருந்து நிலையத்திலிருந்தும், ஜோகூர் பாரு இராஜ மாரியம்மன் கோவிலிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் டெசாருவிற்கு புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு இடங்களிலிருந்தும் காலை 9.30 மணிக்கு புறப்படவுள்ளன.

இதனையொட்டிய மேல்விவரங்கள் உங்களுக்கு விரைவில் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியோ தகவல் அனுப்பிவைக்கப்படும்.

மாநாட்டுப் பேராளர்கள் பின்வருபவனவற்றை மறவாமல் உடன் கொண்டுவரவும்:

1. அடையாள அட்டை
2. வங்கிமூலம் கட்டணப்பதிவுக்கான அடையாளப் பற்றுச்சீட்டு
3. மாநாட்டுக் கட்டண இரசீது
4. ஒளிப்படம் (புகைப்படம்) (மின்னஞ்சல் வழி அனுப்பாதவர்கள்)
   விரைவில் அனுப்பவும்.


பேராளர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

நன்றி.


ஏற்பாட்டுக்குழுவினர்.