தலைப்பு:
மலேசிய சிங்கப்பூர் தமிழிலக்கிய வளர்ச்சியும் செல்நெறிகளும்
குறியிலக்கு:
இரு நாட்டு இலக்கியப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லல்
முன்னுரை:
மலேசிய சிங்கப்பூர் இலக்கிய உறவு மிக நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. சிங்கை தனி நாடாக உருப்பெற்ற பிறகும் தொடர்ந்து வந்த இவ்வுறவு அண்மைக் காலமாக தொய்ந்த நிலையை அடைந்துள்ளது.தமிழுலகும் அதைச் சார்ந்த இலக்கிய உறவும் புதுப்பிக்கப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தமிழிலக்கிய படைப்புகளை முன்னெடுத்துச் செல்லவும் பல ஆக்ககரமான இலக்கியப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், பண்பட்ட முதுநிலை படைப்பாளர்கள் இந்த இளைய தலைமுறையினர்க்கு வழிகாட்டிகளாக, முன்னோடிகளாக விளங்கவும் ஒரு தளம் தேவை. அதை உருவாக்குவதே இந்த அமைப்பின் உன்னத நோக்கமாகும்.
பொது நோக்கம்:
1. மலேசிய சிங்கப்பூர் இலக்கியப் படைப்புகளை ஒரு நாட்டின் வாசகரிடையே கொண்டு செல்லல்.
2. மலேசிய சிங்கப்பூர் இலக்கியவாதிகள் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ளவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் களம் அமைத்துக் கொடுத்தல்.
3. இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து இலக்கிய பணிகளில் ஈடுபட ஆவன செய்தல்.
மாநாட்டின் உடனடி நோக்கம்:
1. இரு நாட்டுப் படைப்பாளர்களிடையே நட்புறவை வளர்த்தல்.
2. சமகால இலக்கியப் படைப்புகளைப் பற்றிய கண்ணோட்டமும் வளர்நிலை நோக்கிய முன்னெடுப்பும; சிக்கல்களை அடையாளங்காணுதல்.
3. முதிர்ந்த எழுத்தாளர்களின் அனுபவ பகிர்வும் இளைய தலைமுறையினரின் எழுத்திலக பிரவேசமும்; ஒரு செயல்திட்டம் வரைதல்.
விரிவான தகவலுக்கு நன்றி. தமிழுக்காக வியர்வை சிந்தும் எவரும் போற்றப்படக்கூடியவர்கள். அவ்வகையில் தமிழர் சங்கத்துக்குக் குறிப்பாக திரு வேணுகோபால் நடேசன் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழை வளர்க்கும் பெரும் பணியில் நாம் ஈடுபடாவிட்டாலும் பரவாயில்லை. ஏனெனின் ஏற்கெனவே நம் தமிழ் வளர்ந்து பெரிய ஆலமரமாய் தான் நின்றுக்கொண்டிருக்கிறது. . இன்றும் இனி என்றும் அந்த பெரிய ஆலமரம் சாயாமல் தலை நிமிர்ந்து நிற்குமாறு பாதுகாத்தாலே நாம் நமிழுக்குச் செய்யும் பெரும் தொண்டாகும்.
ReplyDeleteஅன்னைத் தமிழை வளர்ப்பதை விட முதலில் அதற்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் பாதுகாப்போம் என்பதே அனைத்துத் தமிழ் நல்லுள்ளங்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.
நன்றி, வணக்கம்
வேதநாயகம்